• August 22, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் 50 வயது பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில், அதன் குட்டி தனது தாயைச் சுற்றி வந்து பாசப் போராட்டம் நடத்தியது காண்பவரை துயரில் ஆழ்த்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் புலி, யானை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை கொடைக்கானல் அருகேயுள்ள கோம்பை வனப்பகுதியில் உடல் நிலை சரியில்லாத தாய் யானை, அப்பகுதியில் மயங்கி விழுந்தது. இதைப் பார்த்த அதன் குட்டி யானை தனது தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *