
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம், முராத்நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், மீரட் பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சிவம் உஜ்வாலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் முராத்நகர் போலீஸ் நிலையத்தில் புது மனைவி நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: திருமணத்துக்குபிறகு மீரட்டில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றபோது, பாலிவுட் நடிகை நோரா பதேகி போன்று மனைவி வேண்டும் என்று கணவர் வலியுறுத்தினார். என்னை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பி தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய நிர்பந்தம் செய்தார்.