
புதுடெல்லி: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், எவர்மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்ரிக். இவருக்கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரியானோவுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தன. கடைசி ஆண் குழந்தை நோயல் ரோட்ரிக் (6).
இந்த சிறுவனுக்கு நரம்பு மண்டல பாதிப்பு, சுவாசக் கோளாறு, எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்தன. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய மரியானோ, மெக்ஸிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதன்பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஸ்தீப் சிங் என்பவரை, சிண்டி ரோட்ரிக் திருமணம் செய்து கொண்டார்.