
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகளை, சென்னை காவல் துறை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில், அன்றைய தினம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட உள்ளன. பின்னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் காவல் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), பிரவேஷ்குமார் (வடக்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.