
புதுடெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது அக்னி-5 ஏவுகணை. அணு ஆயுதங்களுடன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது.