• August 22, 2025
  • NewsEditor
  • 0

சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்.

சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக கொடிபிடிக்கத் தொடங்கினர். இதையடுத்து அதிமுக-வினருடன் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உமா மகேஸ்வரியை சேர்மன் இருக்கையை விட்டு இறக்கியது திமுக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *