
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகளை கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துக் கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.