
சென்னை: “திமுகவில் மல்லை சத்யா எப்போது இருந்தார்? அவர் சிறையில் அடைக்கப்பட்ட தேதி வாரியாக பட்டியல் தர வேண்டும்” என மல்லை சத்யாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது: “என் மீது புழுதி வாரி தூற்ற ஒரு நபர் தயாராகி விட்டார். உண்மைகளை மறைத்து பொய்களை வெளியிடுவது என முடிவெடுத்து அவர் பேசுகிறார். நான் வாரிசு அரசியலை கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு நானா துரோகம் செய்பவன் என கொதித்து பொய் சொல்கிறார். மனசாட்சி என ஒன்று இருந்தால், அதன் கதவை தட்டி பார்க்க வேண்டும். அவர் கேட்பது எதுவானாலும் செய்து கொடுப்பதே என் கடமை என வாழ்ந்து வந்தேன்.