
சென்னை: நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்டுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்று, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், இன்று (21-ம் தேதி) நடைபெறும் இல.கணேசனின் புகழஞ்சலி நிகழ்வுக்கு குடும்பத்தினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இல.கணேசன் மறைவு என்பது பெரும் இழப்பு. நான் கட்சி நிகழ்ச்சி காரணமாக வேறொரு ஊரில் இருந்ததால், என்னால், இல.கணேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.