• August 21, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மங்கல இசை, மதுரை மாநாட்டுக்கான சிறப்புப் பாடல் என்று கூட்டம் தொடங்கியது. அதில் விஜய் பேசியதாவது: “ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி என்று பல்வேறு மிருகங்கள் இருந்தாலும் சிங்கம்தான் காட்டின் ராஜா. அந்த சிங்கம் வேட்டைக்குப் போனாலும் ‘சிங்கிளாக’ தான். தன்னைவிட பெரிய விலங்கைதான் வேட்டையாடும். அதுதான் நம் நிலைப்பாடு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *