
மயிலாடுதுறை: “மத்திய அரசின் புதிய மசோதா மூலம் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு பிடிக்காத பாஜக முதல்வர்களை கூட பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் ஆபத்து இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய பாஜக அரசு, அரசியல் சாசத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே உஃபா சட்டம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது விசாரணையின்றி, காலவரையறையின்றி சிறையில் அடைக்கும் நிலை இருந்தது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள், கருத்து சொல்பவர்களை கைது செய்யக் கூடிய வகையில் பிஎன்எஸ் என்ற புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தனர்.