
புதுடெல்லி: மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபடத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.