
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 22) பிஹார் மற்றும் மே.வங்கத்தில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரு மாநிலப் பயணத்தை பிஹாரில் தொடங்குகிறார். கயாவில் காலை 11 மணிக்கு தொடங்கும் விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.