• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி காரண​மாக மூடப்​பட்​டிருந்த 3, 4-வது நடைமேடைகள் ஓரிரு நாளில் திறக்​கப்பட உள்​ளன. இதையடுத்​து, மன்​னை, செந்​தூர் விரைவு ரயில்​கள் மீண்​டும் எழும்​பூரில் இருந்து இயக்​கப்பட உள்​ளன. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.734.91 கோடி​யில் மறுசீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைப்​பது உட்பட பல்​வேறு பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதுத​விர, 1 முதல் 11-வது நடைமேடை வரை இணைப்பு நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​களும் தொடங்​கின. இதையொட்​டி, முதல்​கட்​ட​மாக, கடந்த ஜூன் முதல் வாரத்​தில் 1, 2-வது நடைமேடைகளும், பின்​னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்​பட்​டன. இதனால், எழும்​பூரில் இருந்து மன்​னார்​குடி செல்​லும் மன்னை விரைவு ரயில், திருச்​செந்​தூர் செல்​லும் செந்​தூர் விரைவு ரயில் உட்பட 6 ரயில்​கள் தாம்​பரம் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன. எழும்​பூர் – புதுச்​சேரி விரைவு ரயில் உள்​ளிட்ட சில ரயில்​கள் கடற்​கரை நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *