
சென்னை: நீதித் துறையை விமர்சி்த்து பேசியதாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது, வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நீதித்துறையையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் விமர்சித்துப் பேசியதாகவும், எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.