
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நடத்திவரும் போராட்டம் நேற்றும் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகைகளில் போராடுபவர்களை காவல் துறை கைதுசெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் போராட்டம் நீடித்தது. சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட 7 பணி மனைகளில் தொழிலாளர்களின் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.