
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஏர் இந்தியா, இண்டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன் விமானங்கள் இயக்கப்பட்டன.
அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாடுகளிடையே சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டது. இதனால் இந்தியா – சீனா நேரடி விமானப் போக்குவரத்து நடைபெறவில்லை.