• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன.

அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா – சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *