
அரியலூர்: எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்களை ஒடுக்கவே புதிய சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழாவில் இன்று (ஆக.20) பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்ளிடம் கூறியதாவது: இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெற உள்ளநிலையில், தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.