
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2007ம் ஆண்டு வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை உடனடியாக செலுத்தும்படி கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை சார்பில் சமீபத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.