
திருநெல்வேலி: தவெக மாநாடு அரசியலில் எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுகச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் ஆகியோர் ஒண்டிவீரன் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.