
புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை நேரு ஒப்புக் கொண்டார் ” என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. நாட்டை, ஜவஹர்லால் நேரு இரண்டு முறை பிரித்துவிட்டார்.