
புதுடெல்லி: மாநில அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாட உள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக தீபாவளிக்குள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குறைந்த பட்சம் 5 சதவீதம், அதிகபட்சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.