
பூந்தமல்லி: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா செப். 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக சென்னை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு, கட்சி நிர்வாகிகள் சால்வை, வீரவாள் வழங்கினர். இந்த கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தாம்பரம் மாநகராட்சிக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.