
நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அவற்றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்களில் தேசியகீதத்துக்குப் பதிலாக, அதே மெட்டில் கிறிஸ்தவப் பாடலை பாடுவது, ஒலிபரப்புவதாகக் கூறப்படுகிறது.