
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். எனவே, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
இதனிடையே, ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார்.