
விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு, ராமதாஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் அன்புமணியால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராமதாஸால் நடத்தப்பட்ட மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனரான ராமதாஸே பாமகவின் தலைவராக செயல்படுவார் என்ற தீர்மானம் நிறைவேறியது.