• August 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ – ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *