
சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது.
பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு 24 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.