• August 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 24 மாதங்​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள பணப்​பலன்​களை வழங்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் (சிஐடி​யு) சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்​னை​யில் பல்​ல​வன் இல்​லம் முன்பு நேற்று நடை​பெற்​றது.

பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலா​ளர்​களுக்கு 24 மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வுக்​கால பலன்​களை வழங்க வேண்​டும்; பணி​யில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்​பந்த நிலு​வையை கொடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாநிலம் முழு​வதும் 21 மையங்​களில் போக்​கு​வரத்து ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள் காத்​திருப்பு போராட்டத்தை தொடங்​கி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *