
சென்னை: “பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாயமான பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.” என்று பாஜகவை சரமாரியாக விமர்சித்துள்ளார் மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மர்ம தேசத்து மனிதர்கள். ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பாஜகவை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.