• August 19, 2025
  • NewsEditor
  • 0

புது டெல்லி: கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான பேச்சுவார்த்தையின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.

இந்தியா – சீனா இடையேயான நீண்டகால எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதற்கான மிக உயர்ந்த அமைப்பான சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றுக்காக, சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று டெல்லியில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியா- சீனா உறவுகளில் வளர்ச்சி போக்கு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட தோவல், "எல்லைகள் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியும் இருந்தன. இதில் நமது இருதரப்பு பங்களிப்பு மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தன" என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *