
விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட 16 வகையான குற்றச்சாட்டுகளுக்கு வரும் 31-ம் தேதிக்குள் விளக்க அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
பாமகவில் உட்கட்சி மோதல் தொடர்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியே ‘பொதுக்குழு’ கூட்டத்தை நடத்தி உள்ளனர். சென்னையில் அன்புமணியால் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.