
வேலூர்: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமி வந்த நிலையில், கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 'அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்' என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அணைக்கட்டில் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்து நின்ற உடனே, அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் கண்டுபிடித்தனர்.