
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது 314 கி.மீ. தூரத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை கேப்டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய முப்படைகளும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. அதில் தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் ராணுவ வலிமையை பார்த்து உலக நாடுகள் அதிசயித்தன.