
கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகள்கள், பணத்துக்காக ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.