
‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். சீமானின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
ஆகஸ்டு 21-ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாநாடு தனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய். இந்தச் சூழலில்தான் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து விஜய் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.