• August 19, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு எதிர்க்கட்சிகள் பாடுபடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சூளுரைத்தார். இண்டியா கூட்டணியின் முகமாக ராகுல் இருப்பார் என்பதற்கான குறியீடாக அவரின் பேச்சு அமைந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17 முதல் பிஹாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வருகின்றனர். இன்று பிஹாரின் நவாடாவில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “அடுத்த முறை, 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குகளைத் திருடவும், பிஹார் மக்களை முட்டாளாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பிஹாரிகளின் வாக்களிக்கும் உரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *