
சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும், காவல் துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: 13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர்.