• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்​ளார். தொடர்ந்து அவர் இண்​டியா கூட்​ட​ணி​யிலுள்ள கட்சி தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு கேட்க உள்​ளார் எனத் தெரி​கிறது.

ஆளும் கட்​சி​யின் வேட்​பாளர் என்​ப​தால் அதன் தேர்​தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்​படு​கிறது. அதேசம​யம், சிபிஆருக்கு எதி​ராக ஒரு உறு​தி​யான வேட்​பாளரை நிறுத்த எதிர்க்​கட்​சிகள் கூட்​ட​ணி​யான இண்​டியா சார்​பிலும் வியூ​கம் அமைக்கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *