
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் இண்டியா கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார் எனத் தெரிகிறது.
ஆளும் கட்சியின் வேட்பாளர் என்பதால் அதன் தேர்தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது. அதேசமயம், சிபிஆருக்கு எதிராக ஒரு உறுதியான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டணியான இண்டியா சார்பிலும் வியூகம் அமைக்கப்படுகிறது.