• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வன்​னிய சங்க முன்​னாள் தலை​வர் காடு​வெட்டி ஜெ.குரு​வின் மகள் குரு.​விரு​தாம்​பிகை சென்​னை​யில் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸும், தலை​வர் அன்​புமணி​யும் சண்டை போட்​டுக்​கொள்​வது​போல நாடக​மாடி வன்​னியர் மக்​களை ஏமாற்றி வரு​கின்​றனர். இவர்​கள் வன்​னியர் சமூகத்​தின் நலனுக்​காக சண்டை போட​வில்​லை. பணத்​துக்​காக​வும், பதவிக்​காக​வும் மட்​டுமே சண்டை போடு​கின்​றனர். இதனால் கட்​சிக்கு எந்த பயனும் இல்​லை. இது முழுக்க அரசி​யல் நாடக​மாகும்.

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு​வில் 16 குற்​றச்​சாட்​டு​கள் அன்​புமணி மீது வைக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்​கை​யும் ராம​தாஸ் எடுக்​க​வில்​லை. இதுவே அதில் ஒரு குற்​றத்தை ஜி.கே.மணி​யோ, அருளோ செய்​திருந்​தால் இந்​நேரம் கட்​சி​யில் இருந்து அவர்​களை நீக்​கி​யிருப்​பார்​கள். ராம​தாஸை பைத்​தி​யம் என்று சொல்​லும் அன்​புமணியை கட்​சி​யில் இருந்து நீக்​க​வில்​லை. மாறாக பிறந்​த​நாள் விழாக்​களில் மாறி, மாறி கேக்​கு​களை ஊட்​டி​விடு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *