
சென்னை: வன்னிய சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மகள் குரு.விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் சண்டை போட்டுக்கொள்வதுபோல நாடகமாடி வன்னியர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் வன்னியர் சமூகத்தின் நலனுக்காக சண்டை போடவில்லை. பணத்துக்காகவும், பதவிக்காகவும் மட்டுமே சண்டை போடுகின்றனர். இதனால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. இது முழுக்க அரசியல் நாடகமாகும்.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் ராமதாஸ் எடுக்கவில்லை. இதுவே அதில் ஒரு குற்றத்தை ஜி.கே.மணியோ, அருளோ செய்திருந்தால் இந்நேரம் கட்சியில் இருந்து அவர்களை நீக்கியிருப்பார்கள். ராமதாஸை பைத்தியம் என்று சொல்லும் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கவில்லை. மாறாக பிறந்தநாள் விழாக்களில் மாறி, மாறி கேக்குகளை ஊட்டிவிடுகின்றனர்.