
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திரா ஆகியோரது வீடுகள், ஐ.பெரியசாமி மற்றும் அவரது இளைய மகன் பிரபு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சொத்துகள், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.