
திருவாரூர்: ‘ராமரை இழிவாகப் பேசிய கவிஞர் வைரமுத்துவை நடமாட விடக்கூடாது’ என மன்னார்குடியில் ராஜமன்னார் செண்டலங்கார ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக இந்துக்களுக்கு விரோதமான போக்கு அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடுபிடிகளை விதிக்கிறது.