• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கூறி​யுள்ளனர்.

தேசிய பாது​காப்பு அகாட​மி, இந்​திய ராணுவ அகாடமி போன்​றவற்​றில் பயிற்​சி​யின்​போது எதிர்​பா​ரா​வித​மாக காயமடைந்து கை, கால்​களை இழந்​தவர்​கள் ராணுவப் பணிக்கு சேர்க்​கப்​படு​வது இல்​லை. அந்த வகை​யில், கடந்த 1985 முதல் இது​வரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் 20 பேரும் மாற்​றுத் திற​னாளி​யாகி வீட்​டுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *