
மதுரை, திண்டுக்கல், தேனி நாடாளுமன்றத் தொகுதிகளில் வட மாவட்ட பாஜக நிர்வாகிகள் மேற்கொண்ட பூத் கமிட்டி ஆய்வில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் கிளைகளை பலப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. பாஜகவில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்று வருகிறது. பூத் கமிட்டி ஆய்வுப்பணி பிற மாவட்ட பாஜக நிர்வாகிகளை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆய்வுக்குச் செல்பவர்களுக்கு கட்சியிலிருந்து ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.