
மும்பை: மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பால்கர், சிந்துதுர்க், ஔரங்காபாத், ஹிங்கோலி, ஜல்கான், ஜல்னா, நான்டெட், பர்பானி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.