• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அக்.17-ம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை, நெல்லை உள்பட தென் மாவட்டத்துக்கான முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்தவகையில், பண்டிகைக்கு 4 நாட்கள் முன்பாக டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *