• August 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், சொத்து வரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று மேயர் பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வரும் அதிமுக, மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் கூட மேயர் பதவி விலக வலியுறுத்தாமல் அடக்கி வாசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், வரி விதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கணவர், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மட்டுமின்றி குடியிருப்பு கட்டிடங்கள் வரை சொத்துவரி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *