
சேலம்: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117. 56 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,223 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலையில் நீர்வரத்து 7,382 கன அடியாக அதிகரித்தது.