
அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் அந்தக் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இரண்டாம்கட்ட தலைவர்களை வளரவிடாமல் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என இபிஎஸ்ஸுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.
பணிவானவர், விசுவாசமானவர் என்பதால் தான் சிறை செல்லும் முன்பாக இபிஎஸ்ஸை முதல்வர் இருக்கையில் அமர்த்திவிட்டுச் சென்றார் சசிகலா. ஆனால் அவரிடம் அநியாயத்துக்கு பணிவுகாட்டி பதவிக்கு வந்த பழனிசாமி, அடுத்த சில நாட்களிலேயே தனது இன்னொரு முகத்தையும் காட்ட ஆரம்பித்தார்.