
சென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் நடத்தப்படும் தோழி விடுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பணிபுரியும் பெண்கள் வசித்து வருகின்றனர்.