
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் உயர் மின் கம்பங்களை புதைவட மின் கம்பிகளாக மாற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தி அதன் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. ஆனால் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயர் கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாகவே மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.